Tuesday, October 22, 2019

பெயர்க் கதவம் திறவாயோ?



இரவெல்லாம் பெய்திருந்தது மழை
என்னும் அடையாளம் காட்டும்
அதிகாலைப் பொழுதில்
வெளிக் கதவில் முட்டிக்கொண்டு
பறந்து சுற்றி வந்தது
இதுவரை நான் பார்த்திராத
தும்பியைப் போன்றதொரு பூச்சி.

அவளுக்குக் காட்டிட ஆவலாய்
உள்ளே சென்று திரும்பியபோது
போய்விட்டிருந்தது.

பெயரைச் சொல்லிக்கக்கூட மறந்து
போய்விட்டதே என்றேன்.

சந்தேகமே இல்லை
உங்கள் பெயரேதான் அதற்கும்
என்றாள்.

உண்மைதான்.
எனக்கொரு பெயரை நான்
வரித்துக் கொள்ளும் முன்
நானாகத்தான் இருந்தன எல்லாம்.

No comments:

Post a Comment