Tuesday, August 27, 2019

இரண்டு பூக்கள்



காட்டுப் பூக்கள்
மலர்வதன் உதிர்வதன்
கணக்கறியேன்
ஒருபோதும்.

அன்றொரு நாள்
வீட்டிலிருந்து
வாகனமேகிக் கிளம்பிய
என்னைக் கண்டதும்
சைக்கிள் விளையாடும்
சிறுமியின் மலர்ச்சிரிப்பு
சட்டென்று மறைந்ததன்
மாயம்தான் என்ன?
யானறியேன் பராபரமே!

வேறொரு நாள்
சந்தையிலிருந்து
திரும்பிக்கொண்டிருந்த
என்னைக் கண்டதும்
வாசலில் வீற்றிருந்த
பிள்ளையொன்றின்
வாடிய முகம்
சட்டென்று சிரித்த
சங்கதிதான் என்ன?
யானறியேன் பராபரமே!

No comments:

Post a Comment