Monday, August 26, 2019

தயைநிழற்றி




வங்கியின் வாசலோரத்தில் நிற்கிறது
மின் கம்பியில் உரசாதிருக்கக்
கிளைகள் வெட்டிக் கழிக்கப்பட்ட வடுக்களுடன்
சுருங்காப் பெருங்கருணை சுரந்தபடி
வேறு திசைகளில் கிளைகள் நீட்டி
வாகனங்கள் மீது தயைநிழல் சாய்க்கும்
புலிநகக் கொன்றை.

பணம் வரையவோ அல்லது உள்ளிடவோ
ஓய்வூதியம் பெறுவதற்கோ
பாதுகாப்புப் பெட்டகம் புழங்கவோ
கடனுக்காகவோ
அடகு மீட்கவோ
என்று
கவலையும் அழுத்தமும்
எழுதிய முகங்களுடன்
வருவோரின் தலைமீது
கனிந்த தழல்களெனச் செம்பூக்கள் விரித்துச்
தாழ்ந்திருக்கும் கிளைக் கரத்தை
சற்றேனும் நின்று
யாரும் ஒருபோதும் கண்டிலரே.

No comments:

Post a Comment