Friday, August 10, 2018

எதுகை மோனை


Related image

பாடினார்
பாவேந்தர்

‘சுடுகாட்டு எலும்புதனைச்
சோதித்துப் பார்த்ததிலே
வடநாட்டு எலும்பென்று
வந்த எலும்பு இல்லையடி
தென்னாட்டு எலும்பென்று
தெரிந்த எலும்பு இல்லையடி’…

பன்னாட்டு எலும்பென்று
பார்த்த எலும்பு இல்லையடி

சின்னாட்டு எலும்பென்று
சிறந்த எலும்பு இல்லையடி

என்னாட்டு எலும்பென்று
எடுத்த எலும்பு இல்லையடி

உன்னாட்டு எலும்பென்று
உடைந்த எலும்பு இல்லையடி

முன்னாட்டு எலும்பென்று
முடிந்த எலும்பு இல்லையடி

பின்னாட்டு எலும்பென்று
பிரிந்த எலும்பு இல்லையடி…

நல்லவேளை
எதுகைக்கும் மோனைக்கும்
ஒருவழியாய்
அஞ்சலி செலுத்திவிட்டோம்
அன்பர்களே!


No comments:

Post a Comment