Sunday, October 7, 2012

கரைமரத்தின் கொப்பினைப்போல்




பிரபஞ்சம் முழுவதும்
நின் பாதங்களில்
சிரம் பணியும் இடம்

மீண்டும் மீண்டும்
நதிக்குள் மூழ்கியெழுமொரு
கரைமரத்தின் கொப்பினைப்போல்
உன் பாதங்களில்
தலைசாய்க்கிறேன்

பிரபஞ்சம் அசையுமிடம்
அசையாது கிடக்கின்றதோ
இல்லை அசைகின்றதோ
உன்னில்?

உன்னில் விரிந்த திசைகளில்
உன் முகக் குறிப்புக்கள்

பாழ்வெளி நிறைந்த
அலைகளின் அசைவு
நின் பாதம் பணியும்
தொழுகை

என் யாத்திரையின்
முடிவற்ற இலக்கு
நீ

உன் முகவரி
நான்


a

No comments:

Post a Comment