Monday, February 17, 2020

தோட்டத்தில் இன்று மாலை




குழாய் பீய்ச்சும் தண்ணீர்
பட்டதும்
உதறிக்கொண்டு
அப்பாலொரு புல்லின் மேல்
சென்று அமர்ந்தது
அப்போதுதான் புதிதாய்
என் கண்ணில் பிறக்கும்
பூச்சி ஒன்று.

அதனைப் போலவே
அதன் பெயரை
அறியேன் யானும்.

(பெயரும்தான் உண்டோ?
அதுவேதானொரு பெயரோ?)

அவளை அழைத்துக் காட்டிட
திரும்பி மீள்வதற்குள்
மறைந்து போய்விட்டது
எங்கோ
எனக்குள்.

1 comment: