Tuesday, October 15, 2013

பக்ரீத் (2013)


தேகமெங்கும் பனித்துளிகள் மின்னும்
இந்த நனைந்த ரோஜா
என்ன சொல்கிறது?

செம்மறியின் தியாக ரத்தத்தில்
இஸ்மாயீல் நபியின் கண்ணீர்த் துளிகள்!

இந்த தியாகத் திருநாளில்
அந்தச் செம்மறியின் தியாகத்தை
நினைவு கூர்கிறேன் 

இஸ்மாயில் நபியின்
இதயம் பேசுவதைக் கேட்கிறேன்:

“முஹம்மதின் வருகைக்காகவே
உயிருடன் இருக்க வேண்டும் நான்!
முஹம்மதின் வருகைக்காகவே
உயிரை அர்ப்பணித்திருக்கிறாய் நீ!”


No comments:

Post a Comment