Saturday, May 26, 2012

எப்படிச் சொல்வேன்?




காத்திருத்தலின் வலியில்
இன்பம் தோன்றச் செய்தாய்
கஷ்டத்தில் சுகம் வைத்த உன்
கருணையை எப்படிச் சொல்வேன்?

மீண்டும் பூக்கள்
மீண்டும் வண்டுகள்
பூங்காவில் புதுமை என்ன?
என்கிறார் மேதாவி…
பூக்கள் அறியும்
வண்டுகள் அறியும்
புதுமையை எப்படிச் சொல்வேன்?

சபை சுகிக்கவில்லை
தனிமை இல்லாமல்
தனிமை சகிக்கவில்லை
நீ இல்லாமல்…
நானே எனக்கு
முள்ளாய் உறுத்தும்
நிலைமையை எப்படிச் சொல்வேன்?

நெருப்பின் உலகில் உன்
நேசத்தின் பூக்கள்
இப்போதும் மலர்கின்றன…
உன் பார்வை கொளுத்திய
காதல் தீயின்
குளுமையை எப்படிச் சொல்வேன்?

காலத்திற்குள் நுழைகிறது
காலமின்மை
நபியின் கையில்
சுவனத்தின் திராட்சைக்குலை…
கனியை விஞ்சிய ஞானத்தின்
இனிமையை எப்படிச் சொல்வேன்?

No comments:

Post a Comment