Thursday, May 10, 2012

மின்னல்கள்





காதலின் கண்
முறைத்த போது
புன்னகைத்துக் கொண்டேன்

‘வெட்டுக்காயமும் மருந்தும்’
என்பதல்லவா உன்
விளையாட்டின் பெயர்!

என் இதயம்
மென்மையானது
அம்பின் கூர்மையை
நீ பரிசோதிப்பதை
நான் கண்டபோது

நூறு மின்னல்கள்
தீக்கொளுத்திய பின்
அனைத்தையும்
அணைக்கட்டும்
ஒரே மழை

குருடர்களின் சந்தையில்
அழகிய அடிமைக்கு
விலையேதும் இல்லை

தங்கள் சுதாரிப்பின் மீது
போதையில் இருப்பவர்கள் மத்தியில்
உன் மீதான போதையில்
சுதாரிப்பாக இருக்கிறேன் நான்


இளமையின் காரைப்பூச்சு
பெயர்ந்து கொண்டுள்ளது
அன்பனே!
சுவர் இற்று வீழும் முன் வா

மண்ணாகி நீராகி
வித்தாகிச் செடியாகி
கொப்பாகி இலையாகி
முள்ளாகி மலரானேன்
எப்போது மணமாவேன்?

No comments:

Post a Comment