Friday, May 18, 2012

காயத் தடங்கள்




சூரியனும் சந்திரனும்
நெய்யும் திரைகளில்
மறைந்திருக்கிறாய் நீ

உன் கவிதையில் அசைகிறது
உன் அழகின் நிழல்

உன் பாதம் நோக்கி
என் பார்வை நீளும்போதெல்லாம்
என் முகத்தை உயர்த்துகிறாய்
உன் முகத்திற்கு

உன் பேச்சு
உன் வார்த்தைகள்
உன் அர்த்தங்கள்
நம் உரையாடல்!

நான் உன் பிரதி
நீயே என் நிதி

என் முகத்தின் முன்
நீ கதவுகளைத் திறந்துகொண்டே போனாய்
என் முதுகின் பின்
நான் கதவுகளை மூடிக்கொண்டே வந்தேன்

நீ என்னில் செய்த காயங்கள்
என் பார்வைக்கு மட்டும்
நீ காயம் செய்த இடங்கள்
உனக்கு மட்டும்.

No comments:

Post a Comment