Monday, November 22, 2010

சங்கேதம்


"அலீப் லாம் மீம்"...

திறந்தவுடன் ஒரு
சங்கேதப் பூட்டு.

ஞானிகள் பலப்பல
அர்த்தங்கள் கூறுவர்.

மூளை வியர்த்தது

புழுக்கம் தாளாது
ஜன்னல் திறந்தேன்.

சற்றுமுன் மழையில்
நனைந்த மரத்தில்
பாடித் திரிந்தன
பறவைகள்.

குக்கூ என்று
சங்கேதம் உரைத்துப்
பறந்தது ஒன்று.

2 comments: