Wednesday, November 3, 2010

பூக்காட்சி



பூ பார்த்துச் செல்லும்
கண்கள் பல.

பூ பார்ப்பதில்
பார்க்காமல் செல்லும் 
கண்கள் சில.

பூ பார்ப்பதில்
பார்த்து மட்டும் செல்லும்
கண்கள் சில.

பூ பார்ப்பதில்
பறித்துச் செல்லும்
கண்கள் சில.

பூ பார்ப்பதில்
பூவாகிச் செல்பவர்
யார்?


3 comments:

  1. //பூ பார்ப்பதில்
    பூவாகிச் செல்பவர்
    யார்?//


    சுகர் 'எங்கே எங்கே' என்று தேடிய போது 'ஏன் ஏன்' என்றும் 'இங்கே' என்றும் எதிர் ஒலித்தனவாம் பூக்கள் எல்லாம்.

    'பார்க்கும் இடமெலாம் நியே இருத்தி 'என்ற உணர்வு வருமானால் மனிதன் என்பவன் பூவாகவும் மாறலாம், தெய்வமும் ஆகலாம்.

    இணை வைத்துவிட்டேன் என்று பிடித்துக்கொள்ளாதீர்கள்.

    ReplyDelete