Monday, November 29, 2010

ஏழு மணி காட்சி


அடர்ந்து கிடக்கின்றன
அருகம்புற்கள் அழகாய்
சாக்கடை ஓரங்களில்.

குளிருக்கு இதமாய்ச்
சுடச்சுட தேநீர் தந்து
மக்களை மகிழ்விக்கிறது
சாக்கடை ஓரத்தில்
டீக்கடை ஒன்று.

அருகம்புல் மேயும்
காராம்பசுவின்
கண்ணில் பளபளத்தது
அனைத்தையும் இணைத்து
இழையோடும் சரடு.

மனதைப் போலவே இருந்தது
இந்த ஒரு காட்சியும்.

2 comments:

  1. சரடு என்றால் என்ன? ஆனால் இந்த காட்சி கற்பனையில் ஓடி மனதை படம் பிடித்து காட்டியது.

    ReplyDelete
  2. //சாக்கடை ஓரத்தில்
    டீக்கடை ஒன்று.//

    சாக்கடை, டீக்கடை நல்ல ரைமிங். ஆனால் இது போன்றகவிதைகளுக்கு ரைமிங் கூடாது என்பது விதி அல்லவா?

    ReplyDelete