Sunday, July 8, 2012

சொல்லாவி




தவறாகத்தான் புரிந்துகொள்ளப்படும்
உன் மௌனமும்...
பேசு
மனம் திறந்து பேசு.

நீ பேசும் மண்
பூமியினது அல்ல

நீ பேசும் காற்று
வானினது அல்ல

நீ பேசும் மேகம்
காற்றாலானது அல்ல

நீ பேசும் மழை
நீராலானது அல்ல

நீ சொல்லும் ‘நான்’
உன்னைக் குறிப்பதல்ல

மீண்டும் மீண்டும்
உருக்கொண்டுவிடும்
மொழியின் விளிம்புகளை
அழித்துக் கொண்டே இரு

பேசு
மனம் துறந்து பேசு.

No comments:

Post a Comment