வானம் அளந்து
வட்டமடித்திருந்த ராஜாளி
காணாமல் போனது
காட்டின் இருளுக்குள்.
வேட்டைப் புளகத்தில்
அது கத்தும் ஓசை
கேட்கவில்லை எவரும்
சில காலமாய்.
நேரம் மறந்து
வெட்ட வெளி துறந்து
ஈரக் காட்டுக்குள்
இன்னும் என்ன செய்கிறதோ?
அதன் கூரிய நகங்கள்
பிடித்த மென்சதையின்
ஸ்பரிசச் சேதி
எட்டியதா எவருக்கும்?
அதன் கூரிய அலகு
சுவைத்த குருதியின்
போதை அலை
அடித்ததா அடிமனதில்?