Tuesday, December 7, 2010
கண்ணீர் தருணம்
சொர்க்கத்துக் கன்னியே!
உன் வாய் ஊறலின்
துளியொன்று சிந்தி
கடல்கள் இனித்துப்போகாமல்
பார்த்துக்கொள்.
மோட்சத் தருணம்
இதுவல்ல.
சொர்க்கத்துக் கன்னியே!
காதலின் சுடர்கள் தவழும்
உன் கற்பூர தேகத்தின்
ஒளி நிழல்
பூமியின் மீது சாயாமல்
பார்த்துக்கொள்.
மோட்சத் தருணம்
அல்ல இது.
சொர்க்கத்துக் கன்னியே!
உன் அவிழும் கூந்தலின்
கஸ்தூரி மணம்
பூமியின்மேல் வீசாமல்
பார்த்துக்கொள்.
மோட்சத் தருணம்
இதுவல்ல.
பூமியின் மீது
உன் கண்ணீர்த் துளிகள்
சிந்தவேண்டிய
காலம் இது.
உன் இதயத்தை
என் இதயத்தில்
இணை.
Subscribe to:
Post Comments (Atom)
meditative! :)
ReplyDelete//கடல்கள் இனித்துப்போகாமல்
ReplyDeleteபார்த்துக்கொள்.//
Why? Why not?
Let us have a sweet sea!