Friday, July 8, 2011

பென்சில்



மீண்டும் மீண்டும்
கூர்மை செய்வதும்
பின்
கவிதையாய்
ஓவியமாய்
தாள் பணிந்து கரைவதும்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
இல்லாமலே போகத்தானோ?

உன் விரல்களின் பிடியில்
ஒரு பென்சிலாய்
என் பிரக்ஞை

எழுதிக் கொண்டிருக்கையில்
ஒருபோது இல்லை ஒருபோது
உடைந்துபோவதும்
எதற்காக?

1 comment: