Friday, January 28, 2011

பேசாதே!



இது
மூச்சு விடும் காலம்.
பேசாதே.

காலத்தின் மூச்சாய்
உன் மூச்சு ஆகும் வரை
பேசாதே.

விண்-மண்
விருட்சங்கள்
விலங்குகள்
எல்லாம் ஏகமென்று
தழுவி வரும் தென்றல்
உன்னைத் தொட்டுச் 
சொல்வது என்ன?

"இது 
மூச்சு விடும் காலம்
பேசாதே!" 

1 comment:

  1. //விண்-மண்
    விருட்சங்கள்
    விலங்குகள்
    எல்லாம் ஏகமென்று
    தழுவி வரும் தென்றல்//

    நல்ல கவித்துவம் பொங்கும் வரிகள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete