Sunday, January 9, 2011

மண்ணாகி...



பாலைவனத்தில் சுழலும்
மணற் தம்பமாய்
உன் மூச்சே
என்னை ஆக்கியது.

உன்னிரு கைகளின்
முதல் ஸ்பரிசத்தில்
இணக்கத்தின் ஈரம் கொண்டு
நீ என்னைப் பிசைந்தபோது
உன் அடிமை ஆனேன் நான்.

என்னுள் நீ ஊதிய
அந்த ஒற்றை உயிர்மூச்சே
என் முழு வாழ்க்கை ஆனது.

அந்த மூச்சுக் கடலின்
அலைகளாய்ப் புரள்கிறது
என் ஒவ்வொரு ஸ்வாசமும்.

2 comments:

  1. ஒரு ரூமி (ரஹ்) தெரிகிறார்கள். இதனுடைய தொடர்ச்சி தானே 'அபவுட் மீ' யில் எழுதியிருப்பது..?

    ReplyDelete
  2. //என்னுள் நீ ஊதிய
    அந்த ஒற்றை உயிர்மூச்சே
    என் முழு வாழ்க்கை ஆனது.//

    அஹா! என்ன ஒரு கவித்வம்!

    ReplyDelete