Wednesday, January 5, 2011

நீரின் தடம்





நூற்றை
ஐந்து வென்றது
பாரத முடிவு.

'மென்மை 
வன்மையை வெல்லும்'
தாவோ ஞானம்.

'மெலியோர் பேறு பெற்றோர்
பூமி அவர்கள் வசமாகும்'
ஏசுவின் வாக்கு.

குருவிகளின் கூட்டத்தால்
யானைப் படை துவம்சம்
குரானின் பாடம்.

யுகங்களின் சேதி
கணங்களில் வெளிப்படலாம்
என்பதறிந்தேன்...

கண்ணீர் சுமந்த
அவளின் புன்னகை
என் உறைந்த உள்ளத்தை
உடைத்தபோது.

4 comments:

  1. அழகான உவமைகள் அற்புதமான கவிதை.

    ReplyDelete
  2. உவமைகளை சொன்ன விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது!
    கடலை கூஜாவுக்குள் அடைக்கும் முயற்சி!

    ReplyDelete
  3. நீரின் தடம் நிலையானது .

    ReplyDelete