Wednesday, December 1, 2010

பாங்கு



ஓர் ஐரோப்பிய ஓவியத்தில்
உறைந்து போயிருக்கும்
பதினெட்டாம் நூற்றான்டினுள்
நுழைந்ததுபோல் இருந்தது
மழைக்குச் சற்று முற்பொழுதின்
அந்த வானும் மண்ணும்.

காலமும்கூட
இல்லாததுபோல்
இருந்தது.

இன்றைய தேதிக்குள்
அழைத்து வந்தது
திடீரென்று ஒலித்த
தொழுகை அழைப்பொலி.

3 comments:

  1. எங்கே அழைத்து செல்வதாய் உத்தேசம்..?

    ReplyDelete
  2. 1400 ஆண்டுகள் பின்னோக்கிய
    இரவொன்றில்
    காலச் சக்கரத்தை நிறுத்தி
    தொழுகையில் லயித்திருந்த வேளை
    செல்பேசியின் சத்தத்தில்
    சக்கரம் சுழல ஆரம்பித்து
    இன்றைய தேதிக்கு
    அழைத்து வந்து விட்டது :)

    ReplyDelete
  3. அரபுத் தமிழரின் 'ரிவெர்ஸ் கியர்'தான் ஜோர்!

    ReplyDelete