Wednesday, January 11, 2012

மானின் நரம்புகள்




உன் கானகத்து மரத்தில்
இழைத்துச் செய்ததொரு
இசைக்கருவி கொண்டு
காத்திருக்கிறேன்

முறுக்கி வைத்த
மானின் நரம்புகள்
தளரும் முன்னம் வா

கானகம் எங்கும்
எதிரொலிக்கும் எனினும்
உன்னைச் சேரா இசை
என்ன இசை?

உன் அருகாமையே
மனதை
விரல்களில் சேர்க்கும்

உன் நெருக்கமே
விரல்களை
யாழில் சேர்க்கும்

கையில்தான் இருக்கிறது கருவி
என்றபோதும்
மீட்டாமல் எழுமோ இசை?

முறுக்கி வைத்த
மானின் நரம்புகள்
தளரும் முன்னம் வா.

No comments:

Post a Comment