Monday, August 26, 2019

மேதா விலாசம்

















வைகறைக்காக
வானம்பாடி ஒன்று
வார்த்தைத் தவம் இருந்தபோது
அவசரத்தில்
க்ரா க்ரா என்று
கத்திற்றொரு காகம்!
கவிதை விவஸ்தை
ஏதுமற்ற சூரியனும்
எழுந்துவிட்டதே! – பொழுதும்
விடிந்துவிட்டதே!

பூமிப் பந்தையே
புரட்டவல்லதென்று
விளம்பரம் செய்யப்பட்ட
கவிதை நெம்புகோல்
செடி நடக் குழிப் பறிக்கையில்
மொடக்கென்று உடைந்த
சோகத்தை என் சொல?

ஓ கவிதைக் குருவிகளே!
பூமிப் பந்தையெல்லாம்
புரட்டவும் வேண்டாம்
நிமிர்த்தவும் வேண்டாம்.
அள்ப்பாயுசில் சாகாமல்
நிலைத்து நிற்கும் கவிதைகளை
உங்களில் யாரெழுதப் போகிறீர்கள்?


No comments:

Post a Comment