Thursday, October 25, 2018

யாதெனினும்




















ஆயிரம் மலர்களினூடே
சிறகடிக்குமொரு
வண்ணத்துப் பூச்சியைப் போல்
எப்போதும் காட்சிதரும்
சுட்டிப்பெண்
இன்று
படிக்கட்டில் அமர்ந்திருந்தாள்
துவண்ட முகத்தைக்
கையில் முட்டுக்கொடுத்து

மனக்குறை
யாதெனினும் யாதெனினும்
அங்கையில் முகம் தாங்கற்க
வீழும் முகமல்ல நினது

No comments:

Post a Comment