Saturday, August 2, 2014

சிரப்பணிவு



உன்னையன்றி
வேறெவரும் அறியார்
எங்கெங்கே உன்னைக் கண்டு
தலைசாய்த்தேன் நான் என்று

எப்பொருளில் நீ வெளிப்பட்டபோதும்
உனக்குத்
தலைசாய்த்துவிடுகிறது
உள்ளம்

யாருக்கும் தெரிவதில்லை
உன் பாதங்கள்
யாருக்கும் தெரிவதில்லை
என் சிரப்பணிவு

உன்னை நீ வெளிப்படுத்த
அநேக வழிகள் உனக்கு
என் சிரப் பணிவுக்கோ
ஒரே வழிமுறை மட்டுமே…
உன்னில் கரைந்து
தான் இல்லாமலாவது

தொழுகைகளால்
என் நெற்றி காய்க்கவில்லை
எனினும்
இதயத்தைக் கனியவைத்தாய்

இறைவா!
என்னில் உன்னைக் காட்டி
என்னைப் பணியவைத்தாய்!

3 comments:

  1. இறைவா!
    என்னில் உன்னைக் காட்டி
    என்னைப் பணியவைத்தாய்// superb

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் ,,

    ReplyDelete