Saturday, August 16, 2014

அந்தரிசை


உன் பெயரின்
உச்சாடனம்
சிலபோது
குருவியின்
கூடு பின்னல்
சிலபோது
வண்ணத்துப்பூச்சியின்
கூடு கலைதல்

உரக்க நான்
உச்சரிக்கும்
உன் பெயர்
எல்லோரின் செவிக்கும்
எட்டலாம்

உன் பெயருக்கான
என் இதயத்தின் இசை
நீ கேட்க மட்டுமே

எல்லா மொழியிலிருந்தும்
என்னிடம் பேசினாய்
மௌனமாய்

எல்லா மொழியிலும்
உன்னைக் கேட்டுக்கொண்டேன்
மௌனமாய்

இப்படித்தானே
மெல்ல மெல்ல
அழைத்துச் சென்றாய்
உன் அந்தரிசைக்கு
என்னை நீ

1 comment:

  1. அற்புதமான வார்த்தைகள்

    ReplyDelete