Monday, May 2, 2011

கரை கரை...



 

ஒன்று
ஒன்று மட்டுமல்ல
ஏகம்.

அல்லாஹ்
அளவற்ற அருளாளன்
இரண்டும் ஒன்று.

தொண்ணூற்றி ஒன்பதும்
ஒன்று.

ஒன்றாகும் வரை
எண்களைக் கரை.

கரையில் நிற்கும்
கணக்கு
கடலுக்கு என்றும்
பிணக்கு.

கரையாத வரை
கரைக்கு வராதது
கிடைக்காது
உனக்கு.

4 comments:

  1. மீ..ண்டு(ம்) வந்ததற்கு நன்றி.
    கவிதை புரியாமல் கரைகிறேன் (மலையாளத்தில்)

    ReplyDelete
  2. //கரையில் நிற்கும்
    கணக்கு
    கடலுக்கு என்றும்
    பிணக்கு.//

    சுட்டாலும் கவிதை
    வராது எனக்கு

    ReplyDelete
  3. ///'ஒன்றின் பல தோற்றம்' என்பார் மஹகவி பாரதியார் வசன கவிதை///

    ReplyDelete