Thursday, October 17, 2019

காற்றாடல்




எப்போது வேண்டுமானாலும்
மழை வந்துவிடலாம் என்று
சொல்லிக் கொண்டே இருக்கிறது காற்று.
இன்னமும்
மழை வந்த பாடில்லை என்றாலும்
அது அப்படிச்
சொல்லிக் கொண்டே இருப்பதுதான்
எவ்வளவு சுகமாக இருக்கிறது!

No comments:

Post a Comment