Monday, September 10, 2018

காகம் மட்டும்






















எங்கே பாய்கிறது மின்சாரம்?
என்பதைப் போல் அமர்ந்துள்ளன
மின் கம்பியில்
வரிசையாய்
வண்ணச் சிறு குருவிகள்

அவ்வப்போது
மின்சாரம் தாக்கி
மரணித்து வீழ்கிறது
ஏதேனுமொரு
காகம் மட்டும்

கூடும் காகங்களின்
கரைந்தழுகும் ஓலம்
சகிக்காதவராய்
’அறிவில்லாத பறவை’ என
அலுத்துச் செல்கிறார் ஒருவர்

அப்படி அல்ல அன்பே!
அறியாமையும் இல்லாததொரு
பறவைதான் அதுவும்.

No comments:

Post a Comment