Wednesday, September 18, 2013

முழு நிலா



இதயம்போல் யாருக்காக
இரண்டு துண்டாய் உடைந்தாயோ
அவரின் முகம் போல்
அழகாய் ஒளிர்கின்றாய் நீ.

உன் பேரின்பத்தின் மீது
படர்ந்துள்ளது
பூமியின் மீதான கவலை.

முழுமையாய் நீ
முகம் காட்டும் நாள் இது

நாளை முதல் தேய்வாய்
நாளும் நாளும்
வெவ்வேறு வடிவங்கள்
காட்டியபடி

அவரின் நெற்றியைப் போல்
அவரின் போர்வாளினைப் போல்
அவரின் புன்னகையைப் போல்

அதன் பின்
யாரும் காணாமல்
மறைந்திடுவாய் நீ

இறைவனுடன்
அவருக்கே உள்ள
அந்தரங்க நேரம் போல்.



1 comment: